Monday 23 November 2009

கல்யாண நாள்

தேதி சொல்லவில்லை

அவள்....

சொல்லியது அவள்

முகத்தில் இருந்த

வடுகள் அவளின்

கல்யாண நாள் இன்று என்று

மழை காற்று

கருமேகம்

வனம் முட

முடிந்ததில்லை காற்றின்

இசை ......

மலர் மலை கொண்டு மணமகனை

எதிர்நோக்கும் மணமகளாய்

சாரல் காற்று

Sunday 17 May 2009

தேர்தல் முடிவு

புலம்பெயர்ந்தது
என் சுயமாகிய உணர்வுகள்
வெற்றி என் பக்கம்
என்று நினைத்தேன்
ஆனால் படத்திலோ
அரசியலிலோ அது
இல்லை எனக்கு .....
மரியாதை படமோ
மறு பாதை காட்டியதே
இல்லையா ?????
என்ன செய்வேன் .......
மீண்டும் மக்களிடம்
சொல்கிறேன் 2011 லில் நிச்சயம்
என்று நிச்சயம் இல்லாத
நம்பிக்கையுடன் ......
இரட்டை அர்த்தத்துடன்
கைகளை கொண்டு
வணங்கிறேன் ....

Wednesday 22 April 2009

காதல்




தோல்வியின் தோழியான
வெற்றியை
நான் காதலிக்கிறேன்....
தோல்வியின் அழகு
என்னை வெற்றிடம்
அந்நிய படுத்துகிறது.....
தோல்வி என் பசிக்கு
இறையாய் இருக்க...
என் மனமோ
வெற்றியின் கடைக்கண்
பார்வைக்காக .....

பெண்

பெண்ணே
உன்னை முடி
வாசித்தாலும் சுவாசித்தாலும்
அணைப்பில் சுகமே
எனக்கு....

எண்ணம்

எண்ணம்

அது தானே

என் முளை என்னும்

இருட்டு அறையின்

திறவுகோல்....

படிப்பு என்ற படிகள்

வாழ்க்கை என்னும் அறைக்கு

வழி விட்டதினால்

சரி என்று வழியை

வலியுடன் தேர்ந்து

எடுக்க விளக்காய்

நேர்ந்த தோல்விகள் ; வந்த வெற்றிகள்

அடையாளம் காட்ட

உதவுவது என் சொத்து

என் எண்ணங்கள்.....

முதல் பதிவு








வணக்கம் தோழர்களே தோழிகளே. என் முதல் பதிவு இது. எனக்கு கதை மற்றும் கவிதைகளில் விருப்பம் ஜாஸ்தி. ஏன் பிறந்தோம் என்று தெரியாமல் வாழும் வாலிபன் அல்ல நான். நான் ஏன் பிறந்தேன் என்று எனக்கு தெரியும் ; ஏன் இறக்க போகிறேன் என்று கூட தெரியும்.

எனக்கு சிறு வயது முதல் சந்தோஷம் வந்துவிட்டால் ஒ என்று சத்தம் போட்டு கத்தி விடுவேன். என்ன எழுத போகிறேன் என்று ஒரு தெளிவான கண்ணோட்டம் இல்லமால் தான் எழுதுகிறேன் இந்த பதிவை.

சரி நண்பர்களே.
ஒன்றை மட்டும் கூவி கொள்ள விரும்புகிறேன்....
இன்று புதிதாய் பிறந்தேன் பதிவுலகத்தில்.